Saturday, August 13, 2022

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?


திருமணத்தில் மூன்று முடிச்சு.. ஆசீர்வாதம்.. ஆரத்தி.. எதற்கு? தமிழர்களின் சடங்குகளும் திருவிழாக்களும்.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனை மாங்கல்ய தாரணம் என்று கூறுவர். திருமணத்தின் போது மணமகன், மணமகளின் கழுத்தில் திருமாங்கல்ய சரடை கொண்டு மூன்று முடிச்சு போடுகின்றனர். இந்த மூன்று முடிச்சுகளும் ஒரு பெண் எப்போதும் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாக திகழ வேண்டும் என எத்தனையோ காரணங்களை உணர்த்துகின்றது.

முதல் முடிச்சு :

இறைவன் மற்றும் தேவர்களை சாட்சியாக வைத்து போடப்படுவது முதல் முடிச்சு ஆகும். இது கணவனுக்கு கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.

இரண்டாம் முடிச்சு :

இரண்டாம் முடிச்சு முன்னோர்களை சாட்சியாக கொண்டு போடப்படுகிறது. இது தாய் தந்தையருக்கும், புகுந்த வீட்டிற்கும் கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.

மூன்றாம் முடிச்சு :

பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் சாட்சியாக போடப்படுவது மூன்றாவது முடிச்சு ஆகும். இது தெய்வத்திற்கு பயந்தவளாக இருக்க போடப்படுகிறது.

மணமக்களை ஆசீர்வாதம் செய்வது ஏன்?

திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் ஒன்றாக பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவர். மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்துக் குருக்கள் பிரார்த்தனை செய்து மந்திரம் சொல்லி மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசீர்வதிப்பர். மணமக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆசீர்வாதம் செய்கின்றனர்.

ஆரத்தி :

திருமணம் முடிந்த பிறகு இரு சுமங்கலிப் பெண்கள் வந்து ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி ஏற்பட்டிருந்தாலும் அதை போக்குவதற்கு இந்த ஆரத்தியானது எடுக்கப்படுகிறது.


நன்கொடை வழங்க இதை அழுத்தவும்


Friday, August 05, 2022

முக்கிய அறிவிப்பு.


அனைவருக்கும் இனிய வணக்கம்:-
வன்னியர்வரன்:-

வன்னியர் குல சத்ரியர் களுக்காக வன்னியரால் உருவாக்கப்பட்ட முற்றிலும் இலவசமான வலைத்தளம்.

உங்கள் பிள்ளைகளின்‌ 
கல்வி தகுதி, வயது வரம்பு, வேலை செய்யும் இடம், வாழும் இடம் மற்றும் பிற எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நீங்களே வரன்களை தேடிக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் பதிவிடும் வரன்களின் உண்மை தன்மையை ஆராய அவர்களின் தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசி ஆவன செய்து கொள்ளவும்.
உங்கள் பிள்ளையின் வரன்கள் பற்றிய விவரங்கள் இங்கு பகிர இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு 
"+91-8300655880"
ஜாதகம், முழுஉருவ புகைப்படம், முழுசுயவிவரத்தை  அனுப்பவும். 

***********
பெண் வரன்களின் பாதுகாப்பு கருதி அவர்களுடைய புகைப்படம் பதிவு செய்யப்படவில்லை. 
பெண் வீட்டார் பகிர்ந்தால் மட்டுமே பதிவு செய்யப்படும். 
***********

இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் அன்பர்கள் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை நன்கொடையளித்தால், 
நம் வன்னியர் வரன் இணையதளம் தடையில்லாமல் தொடர்ந்து இயங்கும்.

****#####****
உங்களுடைய நன்கொடையை
எமது  இந்தியன் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தலாம். 

Bank Account details:-
Bank :- Indian Bank. 
Account name;- Poovarasu A
Account number;- 464808464
IFSC code:- IDIB000D016
Indian Bank, Dharmapuri branch.
Ph:-9488608986.
****#####****

பத்துப்‌ பொருத்தங்களைப்‌ பார்த்து, 
ஒன்பது கோள்நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும்‌ உறவை அழைத்து,
ஏழு அடி எடுத்து வைத்து, 
அறுசுவை உணவு படைத்து, 
பஞ்ச பூதங்களும்‌ சாட்சியாக, 
நான்கு வேதங்கள்‌ முழங்க, 
மூன்று முடிச்சுகளால்‌, 
இரு மனங்கள்‌ 
ஒன்று சேரும்‌, 
ஓர்‌ அற்புதமான பந்தத்தின்‌ உறவே, திருமணம். 

விரைவில் வரன் அமைய வாழ்த்துகள். 
"நாம் இருவர்,நமக் இருவர்"
🙏நன்றி 🙏

(குறிப்பு:- இங்கு பகிரப்பட்டுள்ள வரன்களுக்கு தற்போது திருமணம் நடந்திருந்தால் அவர்களின் விபரத்தை வாட்ஸ்அப்பில் தெரிவித்தால் அவை நீக்கப்படும்)